அன்புள்ள குருமாருக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும், பிள்ளைகளுக்கும்,
போட்டிகளின் விபரங்கள், விவிலிய புதிர்போட்டி ஒழுங்குவிதிகள், ஆங்கில பாடல்களின் வரிகள் அடங்கிய முதலாம் சுற்றுமடல் மற்றும் பொதுப்போட்டிக்கான பாடல்களை பழகுவதற்கான இறுவட்டு என்பன தங்களை வந்தடைந்திருக்கும் என நம்புகின்றேன்.
பலரது வேண்டுகோளுக்கிணங்க மற்றுமோர் புதிய போட்டியை அறிமுகம் செய்கின்றோம்.
1. பேச்சுப்போட்டி.
இதில் கவனிக்கப்படவேண்டிய விடயங்களாவன: நேரம், மொழிவளம், குரல்வளம், தொனி, உடல்நிலை, அசைவு, உணர்ச்சி, கவர்ச்சி, தலைப்புக்கு பொருத்தப்பாடு. இப்போட்டி 27ம் திகதி நடைபெறும்.
9வயதிற்குட்பட்டோர் பிரிவு: 3-5 நிமிடங்கள் சிறுவர் விழா தலைப்பு
13 வயதிற்குட்பட்டோர் பிரிவு: 5 – 7 நிமிடங்கள் சிறுவர்; விழா தலைப்பு
16 வயதிற்குட்பட்டோர் பிரிவு: 7 – 10 நிமிடங்கள்: போட்டியின் போது தரப்படும் தலைப்பு. ஆயத்தப்படுத்துவதற்காக சிறிய நேரம் வழங்கப்படும்.
19 வயதிற்குட்பட்டோர் பிரிவு 10 -12 நிமிடங்கள்: போட்டியின் போது தரப்படும் தலைப்பு. ஆயத்தப்படுத்துவதற்காக சிறிய நேரம் வழங்கப்படும்.
2. போட்டிகளுக்கான நுழைவு விண்ணப்பங்களை தயாரித்து அனுப்பவும். போட்டியாளர்களின் முழுப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதி, பிறந்த திகதி, போட்டி, வயதுப்பிரிவு என்பவற்றை எழுதி அனுப்பவும்.
3. வெற்றிக்கேடயங்களை திருப்பிச்செலுத்தாதோர் திரும்ப செலுத்துமாறு கேட்கப்படுகின்றீர்கள்,
4. இம்முறை சிறுவர் விழா மானிப்பாயில் நடைபெறும்.
5. இவ்வருட சிறுவர் விழாவுக்கான சபைகளின் கொடை ருபா 1500. தயவுசெய்து இப்பணத்தை கொண்டுவரும்படியும், கடந்த வருடம் கட்டாத சபைகளும் கவனத்தில் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கின்றோம்.
இறையாசி நிறைக.
இங்கனம்,
ம. யூட் சுதர்சன்
இயக்குநர், சமய கல்விச் சபை
2 ஆகஸ்டு 2011
No comments:
Post a Comment