Tuesday, August 30, 2011

My thanks to Contributors towards Rally 2011

Dear friends,
The following is the Details of contributors who helped us to complete the Children Rally 2011 Successfully. May the dear Lord God bless you all. My sincere thanks to you all.

Challenge cups for Group Competitions:


1. Champion Cups for Bible Quiz Competitions:



Bible Quiz Championship under 19 Cup donated by

Dr. Mrs. C. Ambalavanar ( Manipay) in memory of Late Rt. Rev. Dr. D. J. Ambalavanar



Bible Quiz Championship under 16 Cup donated by

Mr & Mrs. Jeganathan ( Manipay)  in memory of Late. J. Premkumar



Bible Quiz championship under 13 donated by

Mr. Selby Abeyaratnam Solomans (Wattela) In Memory of Late. Mrs. Primrose Atputhamany   Solomans  



 Bible Quiz Championship under 9 Donated by

Mrs. Regina Atputhajeyam in memory of Late. Vethanayagam Atputhajeyam (Karainagar) 





2.       Tamil Keerthanai Common Singing Champion Cups:



1st Place Cup Donated by

Rev & Mrs. P. Thevamithiran of Karainagar in memory of Mts. Sellachchi Pasupathy



2nd Place Cup donated by

Mr & Mrs. J. Amalathas of Uduvil in memory of Late.Mrs. Thevy Jesuthasan



3rd Place Cup Donated by

Dr & Mrs. Prince Jeyathevan in memory of Late. Dr  & Mrs. C. Jeyaratnam





3.       Tamil Hymn Common Singing Competition:



1st Place Cup Donated by

Mr & Mrs. A. C. Thavaranjit ( Navaly) in memory of late. Mr & Mrs. J. Arulanantham



2nd Place cup donated by

Mr & Mrs. J. Yesuthasan (Navaly) in memory of Late.Mr & Mrs. Mary Jobu (Green cup)



3rd Place Cup is donated by

Rev.A.V. Jesuthasan in Memory of Late. Rev. A. C. Thampirajah (Paranthan)





4.       English Common Singing Competition:



1st place cup is donated by

Miss. G. Y. Sivagnanam (Chavakachcheri) in memory of Late. Mrs. Daisy S. Seevaratnam



 2nd place cup is donated by

Rev & Mrs. Earl P. Solomons (Wattale) in Memory of late. Rev.  & Mrs.William Kanthaiah Thevathasan



 3rd Place Cup is donated by

Mrs. Atputharani Verthington late Dr. Willie Jeyaweerasingam Worthington


Prizes for the individual competitions:



5.       Classical Singing Competition:                         Mrs. Joyce Atputhasingam, Wellawata, Colombo.

6.       Drawing Competition:                                         Mrs. Jegathevy Sriskantharajah, Alaveddy, Jaffna.

7.       Essay Writing competition:                                 Mr & Mrs. Samuel Jabro, Australia.

8.       Speech competition:                                           Mrs. Selvini Endraseelan, Switzerland.

9.       Memory Verse Competitions:                         Mr & Mrs. S. Mahendran in memory of late. Mahendran                

                                                 Anton Logarshan, Manipay, Jaffna





Refreshment for children                                               Dr & Mrs. Daya Somasundram, Australia.

Other donation towards the Children Rally 2011: Mr. Ranjan Ratnasingam BTL (Pvt.ltd) Colombo







Mr & Mrs. Mahendran  (Manipay)             Rs. 22,000.00

Dr & Mrs. Daya Somasundram (Aus)          Rs. 20,000.00
Mrs. Joyce Atputhasingam (Colombo)       Rs.   6,000.00

Mrs. Jegadevy Sriskandarajah (Alaveddy)  Rs.   6,000.00

Mr & Mrs. Samuel Jabro (Australia)            Rs.   5,000.00

Mrs. Selvini Endraseelan (Switzerland)      Rs.   5,000.00

Ranjan Ratnasingam BTL (Pvt.Ltd) Col     Rs.  40,000.00












Thursday, August 18, 2011

ஏன் சிறுவர் அருட்பணி?

அருட்திரு. ம. யூட் சுதர்சன்,
CACM ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கான பயிற்சி,
CACM ஆலயம், மானிப்பாய்,
 28 பெப்ரவரி, 2009


ஏன் சிறுவர் அருட்பணி?

சிறுவர் அருட்பணியானது திருச்சபையின் ஓர் முதலீடாகும்
எந்தவொரு நாட்டினதும் உண்மையான சொத்து யாதெனில் சிறுவராகும், அவர்களில் தான் எதிர்காலத்தின் நம்பிக்கையே உள்ளது என்கிறார் ஜேம்ஸ் டொப்சன். திருச்சபைக்கும் அதன் எதிர்காலம் வளமானதாக அமையவேண்டுமாயின், விசுவாசமிக்க சந்ததியை இப்பொழுதே உருவாக்கவென செயற்படுவதே உத்தமம். ஆதற்காகவே திருச்சபைகள் சிறுவர் அருட்பணி அல்லது கிறிஸ்தவ கல்வி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன.

சரியான திசையிலான வளர்ச்சிச்சூழல்;;;

சிறுவயதில் கிடைக்கும் சரியான அனுபவங்கள் அன்புகொண்ட, கருணைகொண்ட, தன்னடையாளங்களை சிறப்பாக விளங்கிக்கொண்ட, தனித்துவம்மிக்க மக்களை  உருவாக்குகின்றது. லூக்கா 2: 40 இயேசுவின் வளர்ச்சியை நாம் இங்கு இவ்வாறு விளங்கிக்கொள்ளலாம்.   உங்களது சிறப்புமிக்க கற்பித்தலினால் அல்ல, மாறாக நீங்கள் எவ்வளவிற்கு சிறப்பான வகையில் ஓர் ஆரோக்கியமான விசுவாச வளர்ச்சிக்கேற்ற சூழலை வழங்குகின்றீர்கள் என்பதில்தான் உங்களது சிறுவர் அருட்பணியின் நீண்டகால நிலைத்ததன்மை வெளிப்படுகின்றது.
சரியான பாதையில் நெறிப்படுத்தப்படும் சிறுவர் அருட்பணியின் விளைவுகள்:
ஓவ்வொரு சிறுபிள்ளையும் தன்வாழ்வுக்காலத்தில் பெறும் செல்வாக்கினால்தான் ஒவ்வோர் சிறுவர் அருட்பணியும் மதிப்பிடப்படும்.

சரியான விசுவாச உருவாக்கம்: (Pழளவைiஎந குயiவா குழசஅயவழைn)

 அற்புதங்கள், அடையாளங்களால் உருவாகும் விசுவாசம் நீடித்து நிலைப்பதில்லை உதாரணம்:; வனாந்தரத்தில் அலைந்த இஸ்ரயேலருக்கு சரியான, என்றும் நிலைக்கக்கூடிய விசுவாசம் உண்டாகவேண்டி மோசே முனிவர் உழைத்தார். அவர்களை ஓர் தேசியஇனமாகவும், கடவுளின் மக்களாகவும் உருவாக்க சரியான தெளிவான விசுவாச அடிப்படைகளை மோசே வழங்கினார். ஆற்புதங்களை மட்டும் நம்பி புளங்காகிதம் அடைந்தவர்கள் துன்பம் வந்தபோது துவண்டு போயினர். உயிருள்ள இறைவனின் வார்த்;தைகளில் ஆழமான விசுவாச உறுதியோடு வாழ்ந்தவர்கள் மட்டும் துவண்டுபோகாமலும், வேறு அற்புதம் செய்யும் கடவுளரை தேடி ஓடாமலும் இருந்தனர்.  உபாகமம் 6: 6,7

குறுகிய கால, நீண்ட கால விசுவாச கட்டுமானங்கள் (ளூழசவ வநசஅ எநசளரள டுழபெ வநசஅ குயiவா டீரடைனiபெ)

செயற்றிறன்மிகு சிறுவர் அருட்பணியானது, சிறுபராயத்திற்கு மட்டுமல்லாது, முழு வாழ்க்கைக் காலத்திற்குமான சரியான விசுவாச கட்டுமானத்தையும், விசுவாச வாழ்வையும் கற்றுக்கொடுக்கின்றது. ஞாயிறுபாடசாலையில் பெறும் கல்விதான் ஒருவரது மரணம் வரையான வாழ்வில் அவரது விசுவாத்தையும், வாழ்வுநெறியையும் தீர்மானிக்கின்றது. மாறாக, சிறுவர் அருட்பணியின் வழியாக குறுகிய கால,  உடனடி விளைவுகளை எதிர்பார்க்கின்றபோது, நமது விசுவாசம் குறித்த கருதுகோள் மிக குறுகியது என உணரவேண்டும். குறுகிய கால விசுவாசம் உடனடி விளைவுகளை கொடுக்கும் அற்புதங்கள,; வாக்குறுதிகளில் இருந்த எழுகின்றது.  நீண்டு நீடித்த விசுவாசம் என்பது இறைவனின் முடிவில்லா ஆற்றலையும், தெய்வீகத்தையும் புரிந்து வாழ்வதில் உண்டாகின்றது.

கிறிஸ்துவில் சந்தேகமற பற்றும் ஒரே ஒரு விசுவாசம் மட்டுமே சிறுவர்கள் தங்களை முழமையாக ஆண்டவருக்கென ஒப்படைக்கவும், தங்கள் முழு இருதயத்தை கொடுக்கவும் உதவும். ஆண்டவர் முடிவில்லா ஆண்டவர்;, சந்ததி சந்ததியாக நம் ஆண்டவர். திருப்பாடல்கள் 144:12, யாத்திராகமம் 3: 14,15 அதாவது, ஆண்டவருடைய வார்த்தையை சிறுவர்களுடைய இருதயங்களில் ஆழப்பதிப்பதன் வழியாக ஆண்டவரை தம் வாழ்வில் முழுமையாக சிறுபராயத்திலேயே ஏற்றுக்கொள்ளவும், அவர்கள் கடவுளின் தெய்வீகத்தை புரிந்தனுபவிக்க செய்வதன் வழியாகவும்தான் இந்த முழமையான ஒப்படைப்பு நடைபெறும்.

வளமான வருங்காலத்தை கட்டமைப்பதற்கான பணி

இன்றைய சூழல்: குழந்தைகள் மீதான தாக்குதல்கள், கருவறையில் அழிக்கப்படுபவை,
போர், குறையுணவு, கவனமின்மை காரணமாக மில்லியன் கணக்கான பிள்ளைகள் இறப்பு
சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் விபச்சாரம், சிறுவர் வியாபாரம், சிறுவர் தொழிலாளர்
நீலப்படங்கள், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பன சிறுவர்களை மோசமாக பாதித்துள்ளது. ஆண்மைய பத்திரிகைகளில் யாழ்ப்பாண பொதுச் சுகாதார சேவையினரால் வெளியிடப்பட்ட குறிப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 5 மாதங்களில் பதினெண்டு வயதிற்கு குறைந்த 75 பேர் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், இவர்களில் அநேகர் பாடசாலை மாணவிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு, விழிப்புணர்வு, கிறிஸ்தவ நெறிவாழ்வு போல்வன கடைப்பிடிக்கப்படுவது மிக மோசமாக சிதைவடைந்திருப்பதை நாம் தௌ;ளத்தெளிவாக காணமுடிகிறது.
வளமான சமூகத்தை கட்டமைக்க விரும்புவோர் சிறுவர்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும், சமயக் கல்வியும், விழுமியக்கல்வியும் இணைந்த கல்விச்செயற்பாடுகள் சமய நிறுவனங்களில் அதிக முக்கியத்துவம் பெறவேண்டும்.

எமது குழந்தைகள்தான் நமது எதிர்காலம். நாளைய தலைவர்கள்.
இன்று சிறுவர் அருட்பணிக்கு விசுவாசமும், துணிச்சலுமுள்ள ஆண்களும் பெண்களும் தேவைப்படுகின்றனர் சிறுவர் அருட்பணி என்பது பலராலும் அசட்டை செய்யப்படுகின்ற ஒன்றாகவும், அது வெறும் விளையாட்டு, முக்கியமற்றதொன்று போலவும் உணரப்படுகின்றது. இன்நிலை மாறவேண்டும். சிறுவர் அருட்பணியின் முக்கியத்துவம் குருமாராலும், திருச்சபை தலைமைகளாலும், பங்கு மக்களாலும், பெற்றோராலும் ஆழமாக விளங்கிகொள்ளப்படவேண்டும். இறையியல் பள்ளிகளிலும் சிறுவர் அருட்பணியின் முக்கியத்துவம், நுணுக்கங்கள் குறித்த கல்வியறிவூட்டல் பாடவிதானங்களில் கட்டாயமாக்கப்படவேண்டும். இப்பணியில் ஈடுபட்டுழைக்க விரும்பும் இறைமக்கள் அதற்கான ஆதரவினையும், பயிற்சியையும் பெற வாய்ப்புக்கள் திருச்சபையில் இன்னும் பெருகவேண்டும்.

நவகால ஞாயிறு பாடசாலை இயக்கத்தின் பிதாமகன்
றொபர்ட்; றேய்கஸ் (1736 – 1811)

இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் மிக்க பகுதிகளில் வீதிகளில் அலைந்த குற்றவாளிகளை மனம்மாற்றவேண்டி றொபர்ட் றேய்கஸ் என்பார் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்விகளை தழுவ, மனமொடிந்தவராய், ஒருநாள் இரவு நித்திரைப்பாயில் வைத்து புதிய தரிசனம் பெற்றார்.  சிறுபிள்ளைகளின் பிஞ்சுக்கால்களால்தான்;;;;;;;;;;; இவ்வுலகு முன்னோக்கி வீறுநடை போடுகின்;;;றது என்ற தரிசனமே அது. பெரியவர்களை மாற்றுவதை விட சிறந்த சிறுவரை உருவாக்குதலே சரியானது என உணர்ந்தார். வருமுன் காத்தலே சிறந்தது என்பதை உணர்ந்தார் றொபர்ட்.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பல சிறுவர்களை கண்டு மனதுருகினார். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஓய்வு பெற்றுக்கொள்ளகூடிய இச்சிறுவர்கள் மத்தியில் விவிலியத்தை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். மேலும் அவர்கட்கு எழுத, படிக்க கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார்.
சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு ஓர் ஞாயிறு பாடசாலை தோற்றுவித்தார். ஏனெனில் ஞாயிறு மட்டுமே சிறுவர்களை அணுக அவரால் முடிந்தது.
வெளியிலிருந்தும் வழமைபோலவே திருச்சபைக்குள்ளிருந்தும்,; எழுந்த எதிர்ப்புகளையும் மீறி, முதலாவது ஞாயிறு பாடசாலையை இங்கிலாந்தில், குளுசெஸ்டரில் 1780இல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஆண்பிள்ளைகள் மட்டுமே கலந்துகொண்டனர். ஏண்ணிக்கை அதிகரித்தபோது பெரிய பிள்ளைகள் சிறிய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தனர்.
றோபர்ட் றேய்க்கஸ் இப்பிள்ளைகளின் கல்விக்காக 4 நூல்களை எழுதினார். இதில் திருவிவிலியமே அடிப்படையான கற்பித்தலாக இருந்தது. புpன்னாட்களில் பெண்பிள்ளைகளும் இவ்வகுப்புகளில் கலந்து கொள்ளவாரம்பித்தனர்.
விரைவிலேயே ஏராளமான ஞாயிறு பாடசாலைகள் குளுசெஸ்டரை சூழு தோன்றவாரம்பித்தன. நவம்பர் 3, 1783இல் றேய்கஸ் ஞாயிறு பாடசாலைகளின் அவசியத்தை குறித்து தமது பத்திரிகையில் கட்டுரை ஒன்று வரைந்தார். அனைவரும் இவற்றால் கவரப்பட்டனர். பல பத்திரிகைகள் இவருடைய பணி குறித்து சிலாகித்து எழுத ஆரம்பித்தன.
பல்வேறு நபர்களும் குழுக்களும் இப்புனித கைங்கரியத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். 4 வருடங்களுக்குள்ளே இங்கிலாந்து முழவதும் 250,000 சிறுவர்கள் ஞாயிறு பாடசாலைகளில் கலந்துகொண்டிருந்தனர். றோபர்ட் றேய்கஸ் 1811 இல் மரணமானார். 1831ம் வருடத்தில் பிரித்தானியா முழவதிலுமுள்ள ஞாயிறு பாடசாலைகள் வாராந்தம் 1,250,000 சிறுவருக்கு அருட்பணி புரிந்துகொண்டிருந்தது.

உங்கள் ஆலயங்களிலுள்ள சிறாருக்கு ஆண்டவரின் அன்பை புரியவைத்து இறைநம்பிக்கையுள்ள நற்பிரஜைகளாக உருவாக்க நீங்கள் செய்யப்போவது என்ன?

சிறுவர் அருட்பணியருக்கான  அல்லது ஞாயிறு பாடசாலை ஆசிரியருக்கான அழைப்பு
சிறுவர் அருட்பணியாளர்கள் கிறிஸ்துவின் உடலில் முக்கிய பங்கு பெறுகின்றனர்
இவர்கள் இச்செயற்பாட்டை சாதாரணமாய் எடைபோடாது, தூயாவியரின் வலுவூட்டலிலும், அவர் அருளும் கொடைகளிலும் முழுமையாய் தங்கியிருக்கவேண்டும்,
ஓவ்வொருவருடைய தனிவாழ்விற்கும் இறைவன் ஓர் நோக்கத்தை கொண்டுள்ளார், நீண்டு நீடித்த சமுதாய மாற்றம் வேண்டுவோர், சிறுவர் அருட்பணிக்கு தம்மை தயாராக்கவேண்டும்.
ஆண்டவர் தமது முதன்மையான கட்டளையை நமக்கு தருகின்றார். மத்தேயு 22: 37 – 39 அர்த்தமுள்ள இறைப்பணிக்கு கடவுளோடு தனிப்பட்ட உறவும், இயேசு கிறிஸ்துவி;;ல் செயற்படும் விசுவாசமும் தேவை. இதுவே இறைபணியாளர்கட்கு அடிப்படையானதாகும்.

மாபெரும் பணி:

மாபெரும் கட்டளை தனிப்பட்டவர்களுக்குரியது, மாபெரும் பணி திருச்சபைக்குரியது. மத்தேயு 28: 18 – 20 சீடராக்குங்கள்! கற்பியுங்கள்! போங்கள், திருமுழுக்காட்டுங்கள், கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்
ஆண்டவருக்கு அதை செய்ய அதிகாரம் இருப்பினும், (வச 18) அவர் குருமாரையும், சிறுவர் அருட்பணியார்களையும் அப்பணிக்கென தெரிந்துள்ளார். நாம் ஆண்டவரோடு சேர்ந்து பணிசெய்யும் பணியாட்கள்! மேலும், எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குதல் என்பது சிறுவர்களையும், கிறிஸ்தவ தொடர்பற்ற சிறுவர்களையும் உள்ளடக்குன்றது. இத்தகையோரை ஒதுக்கிவிட்டு, செயற்படுத்தப்படும் அருட்பணி எதுவும் முழுமையடையமாட்டாது. 

ஞாயிறு பாடசாலை, மாபெரும் பணியை நிறைவேற்றுவதற்கான திருச்சபையின் அமைப்பு

இங்கு பல்வேறு வகையான அணுகுமுறைகள், திறன்கள், கொடைகள் கொண்ட பல தனிநபர்கள் ஒன்றாக குழுவாக பணியாற்றகின்றனர். ஞாயிறு பாடசாலையின் பணிகள் பலவாறாகும். மக்களை அணுகுதல், மக்களுக்கு விவிலியத்தை கற்றுக்கொடுத்தல், மக்களுக்கு பணிசெய்தல், மக்களுக்கு சாட்சியாயிருத்தல், மக்களை வழிபாட்டில், ஆன்மிகத்தில் வளர்த்தல்,மக்களோடு கூட்டுறவு கொள்ளுதல் என இதன் பணி விரிவடைந்துசெல்கின்றது.

நிறைவாக ஆசிர்வாதம்:

இப்பணியில் கடவுளின் உடன் உழைப்பாளர்கள் (1கொரி 3:9) என்ற ஆத்மதிருப்தி எம்மை நிறைவாக்குகின்றது. மேலும் ஆண்டவர் நம்மை நோக்கி, நன்று நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புக்களில் நம்பிக்கைகு உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் என்பார். மத்தேயு 25: 21

உங்கள் ஆலயங்களிலுள்ள மற்றும் அருகிலுள்ள சிறாருக்கு ஆண்டவரின் அன்பை புரியவைத்து இறைநம்பிக்கையுள்ள நற்பிரஜைகளாக உருவாக்க நீங்கள் செய்யப்போவது என்ன?

அருட்திரு. ம. யூட் சுதர்சன்,
இயக்குநர், சமயக் கல்விச் சபை
அருட்பணியாளர், அளவெட்டி ஆலயம்.

சமய கல்விக்குழு யாழ்ப்பாணப் பிராந்தியம் ஆண்டறிக்கை 2010

ண்டவரின் அருளால் யாழ்ப்பாணப் பிராந்தியத்திற்கான சமயக் கல்விக்குழுவின் பணிகளை இதுவரை நிறைவேற்ற தந்த வல்லமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். அவரருளால் இவ்வறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்தவருடத்தில்  5 முறை யாழ்ப்பாண பிராந்தியத்திற்கான சமயக்கல்விக் குழுவினர் 20 யூன், 15 ஆகஸ்டு,  18 செப்ரெம்பர், 22 நவம்பர் ஆகிய திகதிகளில் கூடியுள்ளனர்.

மரணம்:
திருமதி கிருபா பவசிங்கம் அவர்கள் இயற்கையெய்தினார். சமயக்கல்விக் குழுவின் நீண்டகால உறுப்பினராக இருந்து பல அரும்பணியாற்றிய அவர்களது இழப்பு நம்மனைவருக்கும் பேரிழப்பாகும். இவரது வெற்றிடத்திற்கு அருட்சகோ. கமலக்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டார். சமயக்கல்விக் குழுவின் உதவி இயக்குநராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

விலகல்:
அருட்திரு. மைனசீலன் அவர்கள் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக சமயக்கல்விக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது இடத்திற்கு அவர்கள் அருட்திரு. டானியல் ரஞ்சித் ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

ஞாயிறு பாடசாலை ஆசிரியருக்கான செயலமர்வுகள்:
7 பெப்ரவரி, 31 யூலை ஆகிய தினங்களில் இரு ஆசிரியர் செயலமர்வுகள் நடைபெற்றன. முதலாவது செயலமர்வு கடந்த வருடத்திற்கான ஞாயிறு பாடசாலை பாடவிதானத்தை திட்டமிடுவதாகவும், இரண்டாவது சிறுவர் அருட்பணியினை பாரம்பரிய முறைமைகளிலிருந்து விடுவித்து விஸ்தரிப்பு பற்றியதாகவும் அமைந்திருந்தது.

பிள்ளைகள் விழா
28 ஆகஸ்டு 2010 அன்று மிகச்சிறப்பாக அளவெட்டியில் நடைபெற்றது. ஆளவெட்டி அலயத்தில் காலை வழிபாடுகள் நிறைவுபெற்றது. இவ்வழிபாட்டினை அளவெட்டி ஆலய ஓய்வு நாட்பாடசாலைப் பிள்ளைகள் நடாத்த, திருமதி. கலைச்செல்வி கமலகுமாரன் அருளுரையாற்றினார். இறையாசியை அருட்திரு. அ. nஐயகுமாரன் வழங்கினார். அதனை தொடர்ந்து பவனி நடைபெற்றது.  பத்துபனை ஒழுங்கையூடாக  சென்று சங்கானை – அச்சுவேலி பிரதான வீதியை அடைந்து அளவெட்டி அருணாசலம் பாடசாலையை நோக்கி பெரும் பவனியாக பிள்ளைகளும் ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெரியோரும் சென்றனர்.
500க்கும் மேற்பட்டோர் கூடிய இந்நிகழ்வில் தமிழ் தனிப்பாடல்போட்டிகள், குழுப்பாடல் போட்டிகள், ஆங்கில குழுப்பாடல் போட்டிகள், விவிலிய புதிர்ப்போட்டிகள் என சிறப்பாக களைகட்டியிருந்தது. நடுவர்களாக பணியாற்றிய நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.

22 ஆகஸ்டு 2010 அன்று ஆலயங்களில் மனன வசனங்கள், கட்டுரைப்போட்டிகள், சித்திரப்போட்டிகள் என்பன அவ்வவ் ஆலயங்களிலேயே நடாத்தப்பட்டு அதற்குரிய சான்றிதழ்களும் பரிசில்களும் சிறுவர் விழா அன்று பரிசளிப்பு நிகழ்வில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய அனைவருக்கும் குறிப்பாக அளவெட்டி ஆலய மக்கள், குருமார், அளவெட்டி அருணாசல வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், முற்போக்கு சனசமூக நிலையத்தினர் மற்றும் பணவுதவிகள் வழங்கிய திரு. இராஜநாயகம், திரு. மனோ தேவசகாயம் ஆகியோருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

வாலிபர் கருத்தரங்கம்:
16 ஒக்டோபர் 2010 நடைபெற்றது. சகோதரர். nஐயராஐ; அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு ஆண்டவரில் வாழ்தல் குறித்து இளையோருக்கு சிறப்புரை ஆற்றினார்.

ஞாயிறு பாடசாலை ஆண்டிறுதிப் பரீட்சைகள்:
12 டிசம்பர் 2010 நடைபெற்றது. பரீட்சை வினாத்தாள்களை தயாரித்த திருமதி, பவானந்தினி உதயணன், திருமதி. மஞ்சுளா ஆனந்தநாயகம், திருமதி, இந்திரா தேவமித்திரன், திருமதி, சுபாசினி ஹரிச்சந்திரா மற்றும் பல்வேறு உதவிகளையும் வழங்கிய செல்வி. nஐயதர்சினி யோசேப் அவர்கட்கும் விடைத்தாள்களை திருத்தி வழங்கிய ஞாயிறுபாடசாலை ஆசிரியர்கட்கும் எமது நன்றிகள்.

குட்டீஸ் கொண்டாட்டம்
நத்தார் கால சிறுவர் நிகழ்ச்சி 15 டிசம்பர் 2010 அன்று சிறுவர்களின் காலை வழிபாட்டுடன் கிறிஸ்த சேவ ஆச்சிரமத்தில் ஆரம்பமானது. காலை நேர ஆரம்ப வழிபாட்டை நவாலி ஆலய ஞாயிறு பாடசாலைப்பிள்ளைகள் சிறப்பாக நடாத்தினர்.
மிகுதி நிகழ்வுகள் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறுவர் நற்தூதுப்பணி அமைப்பினை சேர்ந்த செல்வி. மிலானி அவர்கள் நற்செய்தி பகிர்வு நிகழ்வை நடாத்தினார். சிறுவருக்கான விளையாட்டு நிகழ்வுகளை சகோ.தேவானந் மற்றும் சகோ. யூட் அவர்களும் நடாத்தினர்.
சிறுவருக்கான ஒற்றுமையாக வாழ்தல் எனும் தலைப்பைக் கொண்ட பொம்மலாட்டம் ஒன்று திரையிடப்பட்டது. நிறைவு நிகழ்ச்சிகளை அருட்திரு. ராஐ;குமார் அவர்கள் நடாத்தினார்.

திருச்சபைகளின் ஒன்றிணைந்த நத்தார் இசைவழிபாடு
மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் 18 டிசம்பர் 2010 அன்று பிற்பகல் 3 மணிக்கு மிக விமரிசையாக நடைபெற்றது. எமது ஆலயங்களில் பாடகர் குழாம்களின் பாடல்களுடன், வேறு சில சபைகளும் பாடல்களை வழங்கின. அருடதிரு. தேவதாஸ், பாஸ்டர். nஐனோ ஆகியோர் தேவசெய்திகளை வழங்கினர். அருட்திரு. அ. nஐயகுமாரன் அவர்கள் நிறைவு செபத்தினையும், இறையாசியையும் வழங்கினார். கல்வாரி தேவாலய இசைக்குழுவினர் இசைவழங்கினர். இதற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றிய அருட்திரு. தேவமித்திரன் அவர்கட்கு எமது நன்றிகள்.

அன்புப்பரிசு:
யாழ்ப்பாணப்பிராந்தியத்தினால் நமது புதிய திருச்சபை பரிணமித்ததிலிருந்து நத்தார் நாட்களில் உதவி தேவைப்படும் இடங்களில் அன்புப்பரிசு எனும் பரிசுப்பொதிகள் சபைமக்களால் வழங்கப்படும் நிகழ்வுகள் இம்முறையும் அனைத்து சபைமக்களாலும் சேகரிக்கப்பட்டது. இப்பரிசுகள் மருதனார்மடத்திலுள்ள நற்செய்திபணி மைய பிள்ளைகளிற்கும், நாக்கணாவத்ததை, கலைநகர் சிற்றாலங்களில் சிறுவர் நிகழ்வுகளில் கூடும் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது 18 டிசம்பர் 2010 அன்று நடைபெற்றது.  இதற்கு பொறுப்பாகவிருந்து பணியாற்றிய அருட்திரு. அன்றூ nஐயானந்தம் அவர்கட்கும், பரிசுகளை வழங்கிய அனைத்து சபை மக்களுக்கும் குருமாருக்கும் எமது நன்றிகள்.

வாலிபர் பணி:
யாழ்ப்பாணப்பிராந்திய வாலிபர் பணியை சிறப்பாக முன்னெடுக்கவென சகோதரர். தேவானந் அரியதாஸ் அவர்கள் வாலிபர் பணிக்கான கூட்டுனராக தெரிவு செய்யப்பட்டார். புல்வேறு சபைகளுக்கும் இவர் கடந்த வருடத்தில் வருகை தந்து வாலிபர் சங்கங்களை சந்தித்துள்ளார். மேலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும் அவர்களின் அழைப்பின்பேரில் வவுனியா, திருகோணமலை, nஐயபுரம் சபைவாலிபர்களுடன் வாலிபர்களுக்கான நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார்.  இவரது பணிக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் எமது நன்றிகள்.

எமது பணிகள் சிறப்புற நடைபெற உதவிய சமயக் கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், பிராந்திய தலைவர். அருட்திரு ராஐ;குமார், தலைவர். அ. nஐயகுமாரன் அவர்கட்கும் அனைத்திற்கும் மேலாக நம் ஆண்டவர் வழங்கிய நல்லுதவிகளுக்காகவும் நன்றிகள்.

Sunday, August 7, 2011

Children Rally 2011 Circular 02 Tamil

அன்புள்ள குருமாருக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும், பிள்ளைகளுக்கும்,

போட்டிகளின் விபரங்கள், விவிலிய புதிர்போட்டி ஒழுங்குவிதிகள், ஆங்கில பாடல்களின் வரிகள் அடங்கிய முதலாம் சுற்றுமடல் மற்றும் பொதுப்போட்டிக்கான பாடல்களை பழகுவதற்கான இறுவட்டு என்பன தங்களை வந்தடைந்திருக்கும் என நம்புகின்றேன்.

பலரது வேண்டுகோளுக்கிணங்க மற்றுமோர் புதிய போட்டியை அறிமுகம் செய்கின்றோம்.

1. பேச்சுப்போட்டி.

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயங்களாவன: நேரம், மொழிவளம், குரல்வளம், தொனி, உடல்நிலை, அசைவு, உணர்ச்சி, கவர்ச்சி, தலைப்புக்கு பொருத்தப்பாடு. இப்போட்டி 27ம் திகதி  நடைபெறும்.
 9வயதிற்குட்பட்டோர் பிரிவு: 3-5 நிமிடங்கள் சிறுவர் விழா தலைப்பு
 13 வயதிற்குட்பட்டோர் பிரிவு: 5 – 7 நிமிடங்கள் சிறுவர்; விழா தலைப்பு
 16 வயதிற்குட்பட்டோர் பிரிவு: 7 – 10 நிமிடங்கள்: போட்டியின் போது தரப்படும் தலைப்பு. ஆயத்தப்படுத்துவதற்காக சிறிய நேரம் வழங்கப்படும்.
 19 வயதிற்குட்பட்டோர் பிரிவு 10 -12 நிமிடங்கள்: போட்டியின் போது தரப்படும் தலைப்பு. ஆயத்தப்படுத்துவதற்காக சிறிய நேரம் வழங்கப்படும்.

2. போட்டிகளுக்கான நுழைவு விண்ணப்பங்களை தயாரித்து அனுப்பவும். போட்டியாளர்களின் முழுப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதி, பிறந்த திகதி, போட்டி, வயதுப்பிரிவு என்பவற்றை எழுதி அனுப்பவும்.

3. வெற்றிக்கேடயங்களை திருப்பிச்செலுத்தாதோர் திரும்ப செலுத்துமாறு கேட்கப்படுகின்றீர்கள்,

4. இம்முறை சிறுவர் விழா மானிப்பாயில் நடைபெறும்.

5. இவ்வருட சிறுவர் விழாவுக்கான சபைகளின் கொடை ருபா 1500. தயவுசெய்து இப்பணத்தை கொண்டுவரும்படியும், கடந்த வருடம் கட்டாத சபைகளும் கவனத்தில் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கின்றோம்.


இறையாசி நிறைக.

இங்கனம்,
ம. யூட் சுதர்சன்
இயக்குநர், சமய கல்விச் சபை
2 ஆகஸ்டு 2011