அன்புள்ள குருமாருக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும், பிள்ளைகளுக்கும்
அளவெட்டி ஆலயத்தில் பிள்ளைகள் விழா காலை வழிபாடு நடைபெற்று, பின்னர் வீதிப்பவனியாக யா-அருணாசலம் வித்தியாலத்திற்கு சென்று மிகுதி நிகழ்வுகள் யாவும் அப்பாடசாலையில் நடைபெறும்.
காலை வழிபாடு ஆரம்பமாகும் நேரம் 8.30 மணியாகும். நேரத்தை கவனத்தில் கொண்டு வரும்படி பணிவன்புடன் கேட்டு நிற்கின்றோம்.
எதிர்வரும் 22ம் திகதி பிள்ளைகள் ஞாயிறாக எல்லா ஆலயங்களிலும் அனுஸ்டிக்கும்படி கேட்டுநிற்கின்றோம். தங்களுக்கு தேவையான வழிபாட்டு ஒழுங்கு பிரதிகளுக்கு உடனடியாக பதிவுசெய்யும் படி கேட்டுநிற்கின்றோம்.
போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் ஆகஸ்டு 15 ஆகும்.
ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களின் தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்களை எமக்கு வழங்கும் பட்சத்தில் இவ்வறிவித்தல்களை நேரடியாக அவர்களுக்கும் அனுப்புவது எமக்கு சாத்தியமாகும்.
வேறு தேவைகள் இருப்பின் தவறாது எம்முடன் தொடர்பு கொள்ளவும், முந்திய சுற்றுநிருபங்கள் கிடைக்கப்பெறவில்லையாயின், தொடர்பு கொள்க. இணைய வசதி இருப்பின், rebcacm.blogspot.com என்ற எமது இணையமுகவரியில் உலாவிப் பெறலாம்.
தங்களுடைய மேலான ஒத்துழைப்பிற்கு எமது நன்றிகள்
இறைபணியில் தங்கள் உண்மையுள்ள,
ம. யூட் சுதர்சன்
No comments:
Post a Comment