Monday, October 4, 2010

வாலிபர் அருட்பணி

அன்பிற்குரிய குருமாருக்கும் மற்றும் வாலிபர்களுக்கும்,



அமெரிக்ன் சிலோன் மிசன் திருச்சபையின் யாழ்ப்பாணப் பிராந்திய வாலிபர்களுக்காக கூடுகை எதிர்வரும் 16ம் திகதி காலை 9 மணிக்கு மானிப்பாய் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. உங்கள் ஆலயங்களிலிருந்து இயன்றவரை அனைத்து வாலிபர்களையும் வருவதற்கு ஊக்குவியுங்கள். வருபவர்களின் எண்ணிக்கையை எமக்கு தயவுசெய்து 14 திகதிக்கு முன்னதாக கிடைக்கும்படி தாருங்கள். இதனால் நிகழ்ச்சியை சிறப்பாகவும், உணவு ஏனைய பிற ஆயத்தங்களையம் சிறப்பாக செய்ய ஒத்துழைப்பு தாருங்கள்.

வாலிபர் அருட்பணி குறித்து குருமாருக்கான நிகழ்வும் இதே நாளில் மானிப்பாயில் குருமாருக்கென தனியாக நடாத்த திட்டமிட்டுள்ளோம். குருவானவரின் மனைவியரும் இதில் பங்கேற்க அழைக்கின்றோம். தயவு செய்து தங்கள் வருகை குறித்தும் எமக்கு 14ம் திகதிக்கு முன் அறியத்தந்து ஒத்துழைப்பு தாருங்கள்.

நிகழ்வு: வாலிபர் மற்றும் குருமாருக்கான சிறப்புக் கூடுகை
இடம்:  மானிப்பாய் அமெரிக்கன் சிலோன் மிசன் தேவாலயம்
காலம்: 16 சனிக்கிழமை, ஒக்டோபர், 2010 காலை 09.00மணி

உங்கள் வேதாகமம், மற்றும் குறிப்பேடுகளை கொண்டுவாருங்கள். மதியவுணவு வழங்கப்படும். ஒவ்வொரு வாலிபரிடமிருந்தும் ரூபா 75.00 காணிக்கையாக எதிர்பார்க்கின்றோம். நன்றி.

No comments:

Post a Comment